16 July 2011

முன்னும் பின்னும் மின்னும்


என் தவறை நீ சொன்னாய்
வந்தது கோபம்..
அத்தவறை நான் உணர்ந்தேன்
சூழ்ந்தது சோகம்..
முன்னதில் உன்னை இழந்தேன்
பின்னதில் என்னை அறிந்தேன்..
இழந்ததைப் பெற இயலாவிட்டால்
இல்லாமையே இந்த உலகமாகும்!
புரிந்து நாம் சேர்ந்துவிட்டால்
புன்னகையே நம் வாழ்க்கையாகும்!!