Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

20 July 2011

உன்னால் நான் 'காலி' ஆனேன்


1.       நம்பிக்கை ஏழைகளை உயிரோடு இருக்கச் செய்கிறது.
பயம் பணக்காரர்களை கொல்கிறது.

2.       அழுகை என்பது உன்னை பலவீனப் படுத்தும்,
சிரிப்பு மட்டுமே உன் எதிரியை பலவீனப் படுத்தும்
.

3.       உலகம் கெடுவது கெட்டவர்களால் மட்டுமல்ல,
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்களாலும்தான்.

4.       ஒருவரை உண்மையாக வெறுத்து விடு. ஆனால்
பொய்யாக நேசித்து விடாதே.

5.       மன்னிக்க மட்டும் கற்றுக்கொள். ஏனெனில் நம்மை ஏமாற்றியவர்களைக் கூட நாம் ஒருமுறையாவது நேசித்திருப்போம்.


6.       கேட்கும் கேள்விக்கு பெண்கள் சரியாகப் பதில் சொல்வது, எக்ஸாம் பேப்பரில் மட்டுமே!

7.       இன்று உன்னால் நான் காலி ஆனேன். நாளை
என்னால் நீ காலி ஆவாய் # மது பாட்டில் மனிதனிடம் சொன்னது.

8.       எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் உங்கள் துக்கம் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?

9.       வாழ்க்கை என்பது மொட்டுக்கள் நிரம்பிய மலர் தோட்டம்.
நாம் சிரிக்கும்போது மட்டுமே அவை பூக்கின்றன.

10.   தெரிந்தவர்களுக்கு உதவும் போது நாம் மனிதனாகிறோம்
தெரியாதவர்களுக்கு உதவும் போது கடவுளாகிறோம்.



   டிஸ்கி 1 :      ப்ளாக் தொடர்பான எனது சந்தேகத்தினை நீக்கி தொடர்ந்து பதிவெழுத வைத்த வந்தேமாதரம் சசிகுமார் சார்க்கு எனது நன்றிகள் பல. 
        
       டிஸ்கி 2 : எனது ப்ளாக்கிற்கு வருகை தந்துள்ள அன்பர்களே, கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துக்களை இட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.